Friday, May 14, 2010

Share

உன்னை தெரிந்து கொண்டேன்...

வெளியே எடுக்க
நினைத்த போது தான்
தெரிந்தது நீ எத்தனை
ஆழமாக உள் சென்றுள்ளாய்
என்று....

பிரிக்க முயன்ற போது
தான் தெரிந்தது நீ
ஒட்டி பிணைந்து ஒன்றாக
மாறியிருந்தது...

மாற்ற நினைத்த
போது தான் தெரிந்தது
நீ என் ரத்தத்தில்
ஒன்றாக கலந்தது.....

என் உயிரே!!
உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்...
இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை...
என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்...
எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை
என்னை விட்டு நீ பிரியும் காலம் வந்தால்...
புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்....

உணர்வோடு கலந்து
உயிரோடு உறவாடி
அரவணைத்துக் காக்க
உன்னை விட்டால்
எனக்கென யாருள்ளார் இவ்வுலகில்….

உன்
அன்பு மழைத்துளி ஒன்று
என்மேல் விழாதா என
ஏங்கித் தவித்து
அன்பும் பிச்சை கேட்கும்
அனாதை ஜீவனாய் நான்….
நீயும்
என்னை விட்டு விடாதே

0 comments: