Sunday, March 25, 2012

Share

எதிர்காலம்...



கருவாய் உருவாகி
உருவாய் அரங்கேறி
பருவங்கள் பல தாண்டி
வருங்கால வாழ்வை நோக்கி
நெருக்குது நாட்கள்

சிந்தனை பெருகி
சிகரத்தை தாண்டிட
நின்று நிலைக்குது
நிதானத்துடன் வாழ்வை
நேர்வழி நகர்ந்திட

பந்தங்கள் அனைத்தையும்
பாசத்தால் அலங்கரித்து
வசந்தங்கள் எல்லாம்
என் சுவாசமாய்
வாசம் வீசி 
என் வாசல் சேரும்
என்ற நம்பிக்கையில்...

6 comments:

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

அழகான கவி தோழி

கவி அழகன் said...

Supper kavithai pirasha

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதை வரிகள் வாழ்த்துகள்

Anonymous said...

நல்ல ஆக்கம்...

சிவரதி said...

கருவாய் உருவாகி
உருவாய் அரங்கேறி
பருவங்கள் பல தாண்டி
வருங்கால வாழ்வை நோக்கி
நெருக்குது நாட்கள்
நல்வாழ்த்துகள்

சுதா said...

வாழ்த்துக்கள்