Monday, February 13, 2012

Share

காதல்..




காதலே!
இளசுகளின் மனங்களின்
அதிபதியாயம்
உன் வரவால் 
முழுமை அடைகிறேன்.
சிட்டாய் பறந்த உன்னை
சிறைப்பிடித்து
இதயத்தில் ஆதரிக்கின்றேன்.
மென்மையான உன்னை
நித்தமும் பூசிக்கிறேன்.
பசுமையான கனவுகளில்
உன்னுடன் கலக்கிறேன்.
என்னுள் நீ இருப்பதால்
உலகையே மறக்கிறேன்.
மனம் என்னும் மாளிகையில்
ஓய்யாராமாய் நீ புரியும்
குறும்புகளில் குதுகலிக்கிறேன்.
ஓயிராயிரம் ரோஜாக்களில்
நீ மட்டும் தனித்துவமாய்
தங்கமாய் ஜொலிப்பாதாய்
என்றும் உணர்கிறேன்.
இவை யாவும் கனவானதினால்
கண்ணீரும் வடிக்கிறேன்.

நண்பர்கள் அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்

4 comments:

செய்தாலி said...

நல்ல காதல் கவிதை
முடிவில் ஏனோ ஒரு சோகம்

சிவரதி said...

காதலில் சோகத்தை
மறந்தவர் மத்தியில்
சோகத்தில் கூட காதலை
கவியாக்கி இரசிக்கும் விதம் அழகு

காதலுக்காய் காத்திருப்பவரும்
காதலில் கால் பதித்தவரும்
காதல் தேசம் இதில் காலமெல்லாம்
கலந்து மகிழ காதலுடன் நானும்
காதலரை வாழ்த்துகிறேன்.

குறையொன்றுமில்லை. said...

நல்லகவிதைதான் சோகம் ஏன்? வாலண்டைண்டே ஸ்பெஷலா?

Anonymous said...

காதலர் தின நல்வாழ்த்துக்கள்...

போட்டி போடுகின்றன உங்கள் வரிகள் காதலோடு...