Wednesday, June 30, 2010

Share

தவிப்பு

 
எத்தனையோ கனவுகள் எனக்குள்..
அத்தனையும் சுக்கு நூராகி
பித்தாக என்னை அலைய வைத்து
ஏன் பிரிந்து சென்றாய் என்னை விட்டு...???

துக்கத்தை பகிர்ந்து கொள்ள நீயில்லா தனிமையில்...
ஆறுதல் சொல்ல ஆளின்றி ...
நானிங்கே தவிக்கிறேன் ...
ஆழமான என் காதலையும்
உன்னடிமையாகி போன என்னையும்
உன்னால் எப்படித்தான் மறக்க முடிந்தது ...???

அடிக்கடி காதல் மொழி பேசிய நம்
கையடக்கத் தொலை பேசிகள் -இன்று
நம்மைப் போலவே மௌனமாகிப் போயின ...!!!

உன் நினைவுகளால் நிறைந்திருந்த
என் நெஞ்சம் மட்டும் இன்று
பிரிவின் வேதனையில்
பரிதாபமாய் தவிக்கிறேன் ...!!!

உன்னருகாமையின்றி இனிமேல்
எப்படித்தான் வாழப் போகிறேனோ ???
இதயம் முன்னிலும் இருளாகிப் போனது
என்றுமே அனுபவித்திராத வேதனை மட்டும்
எனக்குள் இன்று நிரந்தரமாகிப் போனது ...!!!

இருந்த போதும் ....
உன் நினைவுகள் தரும்
வேதனைகளில் வெந்தபடியே..

2 comments:

Jeyamaran said...

நன்றி தங்களுடைய பதிவுகளும் மிக அருமை i voted 4 u but ur forgot pls vote by http://meyoufeelings.blogspot.com/

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கு நன்றி......... i vited 4 u