விதி தேவன் வரைந்திட்டான்
விடியலில்லா இரவுகளாய் - என் மனம்
இருட்டில் இருக்க சபித்திட்டான்...
இறைவனிடம் வரம் கேட்டேன்
என்ன பாவம் நான் செய்தேனென்று
பதில் ஏதும் இன்றி
பாவங்களை சுமந்த
வாழ்க்கை வாழ பிறந்தவளாய்
வாழ்கின்றேன் பாரினிலே..
பரிகாரம் செய்து பாவம் போக்கி
வாழ முயற்சிக்கிறேன் நானும்
ஆயிரம் போராட்டங்கள் மனதினுள்
தோல்வி மட்டும் எனை சூழ
சோர்வின்றி வாழ்கின்றேன் நடைமுறையில்
உறவுகள் நடுவில் போலியாய் சிரித்து
தனிமையில் மனம் சோர்ந்தவளாய்..








