Thursday, November 28, 2019

Share

மன்னிக்க வேண்டுகின்றேன்


இறைவா...!!

என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்..!!!
ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது...!!!
ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..!!
விடைதேடி வினவுகின்றேன் விடைதர யாரிங்கு....? கண்ணீருக்கு கருவுண்டு கருத்துடன் கண்டுவிட்டால் காலமது கனித்திடும் காதலும் இனித்திடும்-இருந்தும் வினவிடவும் மனமும் இல்லை விடைதேட முயலவில்லை..!! புரிந்துணர்வு குறைந்ததினால் புன்னகைக்கு பஞ்சமிங்கு...! இரக்க குணம் வற்றியதால் இரணியனாய் பலர் உள்ளம்..!! நீரில்லா குளத்தினிலே இரதேடி ஏன் அலைகின்றேன்..!! புரியவில்லை எனோ அது. காத்திருந்து காத்திருந்து மாற்றமேதும் காணவில்லை...!! பாவங்கள் சூழ்ந்து என்னை பரிதவிக்க விட்டதுவோ...!! நானறியா பாவங்களை மன்னிக்க வேண்டுகின்றேன்.

0 comments: