Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Thursday, March 21, 2013

Share

அற்புத கலையாய்...


மனம்
கடலை விட
ஆழமானதென
அறிஞர்களின் 
ஆய்வுகளின் வெளியிடை.
அந்த 
ஆழத்தின்
தூரம் அறியும்
இரு உள்ளங்களின்
தேடலாய்...
ஆசைகள் 
கனவுகள்
கட்டி வளர்க்கும்
அற்புத கலையாய்...
"காதல்"

♥-தோழி பிரஷா-♥
11.03.2013
Share

♥♥♥காதல்♥♥♥


எட்டி உதைந்தாலும்
கட்டி அணைப்பேன்
என்பது 
♥ தாயின் காதல்... ♥

தூக்கி எறிந்தாலும்
தாங்கிப் பிடிப்பேன்
என்பது 
♥தகப்பனி்ன் காதல்♥

முட்டி மோதி
சண்டையிட்டாலும்
விட்டுப் பிரிய
மறுப்பது
♥சகோதர காதல்♥

இடியே
விழுந்தாலும்
என்றும் பிரியாது
சேர்ந்தே இருப்பது
♥நட்பு காதல்♥

பிரிவுகள்
தொடரினும்
உறவினை 
வளர்க்கும்
உன்த உறவாய்
♥தாம்பத்திய காதல்♥

-தோழி பிரஷா-
14.02.2013

Tuesday, November 20, 2012

Share

இன்று போல் என்றும்...


துயரங்களை மறந்து
துன்பத்தில் சிரித்து...
இன்பங்களை மட்டே
இசையாய் மீட்டி...
உனக்கென நானும் 
எனக்கென நீயம்
வறுமையிலும் வாடிவிடாது
வாழ்ந்திடுவோம்...
இன்று போல் என்றும்-நாம்
துன்பங்களை மறந்து
இன்பங்களை மட்டுமே
ரசித்திடுவோம்...!

Tuesday, March 22, 2011

Share

விதியின் வழியில்..



வாழ்வின் எல்லையை அறியாத
தொல்லைகள் புரியாத
துள்ளித் திரிந்திட்ட
பிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தை கொடுத்தவள்
கொள்ளை இன்பத்தில்
காதல் வளர்த்தாள்

கள்ளத்தனமின்றி
உள்ளச் சோகத்தோடு
செல்லக் கதைதனையும்
சேர்ந்தே பயின்றதினால்
சொர்க்கத்தின் படிகளில்
செல்கின்ற சந்தோசம் - அவள்
உள்ளத்தில் பளிச்சிட்டது

வீதி வழியில்
ஏற்பட்ட விபத்தாய்
விதி அவள் வாழ்வில்
திருமணம் எனும் வழியில்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாக
கரம் சேர காக்கையில்
கல்பட்டு நொறுக்கிட்ட
கண்ணாடி போன்றே
நொறுக்கிற்று அவள் நெஞ்சு

விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதே தட்டி
பாதி வழியிலே திசை மாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு செழிந்திட
விலகியே சென்றிட்டான்

உயிர் அது துடிக்கவே
உணர்வினை ஊனமாக்கி
உறவுகள் மகிழ்ந்திட
உரிமையை தனதாக்கி
ஏற்றிட்டாள் மண மாலையை....!

Thursday, March 17, 2011

Share

புது வாழ்வு...

 காதல் என்னும் பாடத்தை
கருத்துடனே கற்ற அவள்
தேர்வெழுதும் நேரத்தில்
தோற்றி தவறியதால்
வேறுதுறை தேர்ந்தெடுத்து
வெற்றி பெற்ற நேரமதில்
எண்ணியே பார்க்கிறாள்
மின்னி மறைந்த எண்ணங்களை...


கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...


Thursday, February 3, 2011

Share

வாழ்வில் உதயம் தந்தவளே....

 உயிரானவளே அறியாயோ என்
இதயம் பாடும்  முகாரி ராகத்தை......

உறவுகள் பல இருந்தும்
சொந்தம்கொண்டாட...
சொத்து சுகம் இருந்தும்
சோகம் தீர்ந்து
இன்பம் அளிக்கும்
உன்னத உறவாய்
உயிர் தோழியாய் இருந்த அவள்....

என் உணர்வுக்கு உயிர் கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
ஊக்கத்திற்கு உரம் கொடுத்து
உயர்வுக்கு வழி சமைத்த
உன் உணர்வலைகள் ஒவ்வொன்றும்
என் உதிரத்தில் கலந்து -அவள்
என் உள்ளத்தில் அமர்ந்திட்ட
உண்மை நிலைதனை
உடனே உரைத்த விட்டால்
நிலைமை என்னாகுமோ?

என் வாழ்வில்
உதயம் தந்தவளே
உள்ளமது உதிர்ந்திடுமா? அல்ல
இதயம் தந்து என்னுடன்
இணைந்து வாழ்வாளா?

படத்துடன் கவிதைகளை  காண click here 

Tuesday, February 1, 2011

Share

நம் காதல் கதை...

 சொல்லிடவா நீ எனை
சேர்ந்த நம் காதல் கதைதனை...

கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்

இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்

சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணி இணைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்

உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....

படத்துடன் கவிதைகளை  காண click here

Monday, January 24, 2011

Share

காத்திருப்பு....

கற்பனைக் கனவிலே 
காகிதம் வரைகின்றாள்!
 வெட்கம் தடுத்திட  
தலைகுனிந்து சிரித்து
தரனியை நோக்குகின்றாள்...
பிரிந்திட்ட அவனுக்கு பிற 
தொடர்பு ஏதுமின்றி
காகிதங்கள் வரைந்திடும் - இவள்
அவனின் பதில் கண்டு
இன்பத்தில் துளிர்த்திடுவாள்...

காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
ஆணிவேராய் அவன் துணை
ஆசை நிறைந்த கற்பனைகளுடன்
காத்திருக்றாள்  - அவன்
 வருகைக்காக..

Monday, January 17, 2011

Share

காதலினால்...

 வருடம் ஒன்று கடந்து
வயது ஒன்று கூடியதால் - நானும்
பருவ வயததைடந்து
பார்ப்பதெல்லாம் ரசிக்கின்றேன்...

பாவையவள் பின் செல்ல
பார்க்கும் கண்களெல்லாம்
பரிகசித்ததினால் என்னை
பருவ வயதினிலே
பலரும் செய்யும் தவறிதென
புரிந்து கொண்டு - நானும்
புறப்பட்டேன் உழைப்பதற்கு....

பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு - ஆனால்
உற்ற துணை தான் இருந்து
உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...


Saturday, January 15, 2011

Share

என் உணர்வுகளை....

 சுவாசம் தந்து
இதயம் பறித்து சென்ற
இனியவனே!
அறியாயோ ஒரு சேதி
உன் நினைவுகள்
என்னும் ஆகுதிக்குள்
வீழ்த்து துடிக்கும்
தருணங்களில்
என் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...

Wednesday, December 22, 2010

Share

என்னுள் காதல்............

 ஆசைகள் என்னை தீண்டியதில்லை
எதிர்பார்ப்புகளை விரும்பியதில்லை
கனவுகளில் விழுந்ததில்லை
தனிமையில் சிரித்ததில்லை
பெண்னே உன்னை காணும் வரையில்....

குளிரும் உன் பார்வையில் - என்
வாழ்வின் அர்த்தம் உன்னில் கண்டேன்
என் உயிரின் காதலே
மெல்லியதான உன் புன்னகையும்..
இனிவான உன் வார்த்தைகளும்
கனிவான உன் காதலும்
பெண்மைக்கு அர்த்தங்கள் கூறும்
அத்தனையும் உன்னிடத்தில்...
அசந்துதான் போனேன்
உன் முதல் தரிசனத்தில்....

இதயத்தின் துடிப்புகள் அதிகரிக்கின்றன
என் தேவதை உனக்காக...
ஆசைகளும் அதிகரிக்கின
எதிர்பார்புகளும் நீள்கின்றன
வஞ்சி உன் கரம் பிடித்து
வாழ்க்கை என்னும் பந்தத்தில் இணைய...


Monday, December 20, 2010

Share

உன் காதலினால்......

 அன்பே
உன் உணர்வுகளில்
புரிந்து கொள்ள முடியாத காதலை
உன் கவிதைகள்
என்னை ஸ்பரிக்கையில்
புதிதாய் பிறக்கின்றேன் இன்று
என்னில் இனம் புரியாத இன்பம்
ஒட்டிக் கொண்டதாக உணர்கின்றேன்
புதிதாய் ஒன்றை சுமப்பது போல
இதயம் பட படக்க
இரத்த நாளாங்கள் துடி துடிக்க
என் பிறப்பிற்கான அர்த்ததை
இன்று உணர்கின்றேன்
உன் காதலினால்......

Tuesday, December 14, 2010

Share

மதி கெட்ட பேதை உனக்கு...

("உன் மேல் கொண்ட காதலால்"(01) கவிதைக்கான பதில் கவிதை அவனால் எழுதப்பட்டதாக....யாவும் கற்பனை)
 
 என் சுவாசமாய் நீ என்னுள்
உன் பெயர் சொல்லியே
துடிக்கிறது என் இதயம்
புரியவில்லையா பேதையே உனக்கு?
என் விழிகளை பார் அதில்
சுடராய் தெரிவது உன்முகம்
என் உதடுகள் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும் உன் பெயரையே..
பாலைவனமான என் வாழ்க்கை
உன் பார்வை பட்டதில்
பூங்காவனமாய் பூத்துக் குலுங்குகின்ற
புரியவில்லையா உனக்கு?
உறங்கினாலும் உறங்கிடாத
உன் நினைவலைகள்
நித்தம் சித்திரைவதைகள் தருகின்றன
தெரியவில்லையா உனக்கு?
உன்னைக் காணும் பொழுதில்யெல்லாம்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றனவே
காணவில்லையா நீ?
இந்தனை அதிசயங்களை ஏற்படுத்திய உன்னால்
என்னை புரிந்து கொள்ளவில்லை என்பது
எந்த வகையில் நியாயமடி? 

(இதற்கான பதில் கவிதை அடுத்த பதிவில்)

Saturday, December 11, 2010

Share

உன் மேல் கொண்ட காதலால்....

 உன்னை நேசித்த பின்
உலகம் அறிந்தேன்..
உண்மை அன்பை புரிந்தேன்
உறவுகளின் போலித்திரைகள் தெரிந்தேன்
உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்

உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால் 
புரிந்து கொள்ள முடியவில்லை.....


Thursday, December 2, 2010

Share

நீயிட்ட முத்தங்கள்...

  நீண்ட இரவினிலே
நீயிட்ட முத்தங்கள்
நீள்கின்றன நினைவுகளில்
அன்றய இரவு என் சந்தோச இரவு
அன்பான உன் அழைப்பு
அழகான உன் அணைப்பு
அழுத்தமான உன் முத்தம்
அனைத்தையும் மறந்தவளாய்
உன் தோளிலில் குழந்தையாய்...

Saturday, November 13, 2010

Share

உன்னைக் காதலிப்பதால்....

 இரவின் மடியில் நிலவின் ஒளியில்
நிழலாய் விழுந்த மலரே...
உன் கவிதை மொழியில்
கவலை மறந்து இனிது
துயிலும் குயில் நானே...
பசிக்கும் வயிறும் உன் சிரிப்பைக்
கேட்டால் உணவை வெறுக்கும் தானே...
குருடர் கூட ஒளியைப் பெறுவார்
உன் விழியின் அருகில் நின்றாலே...
ஊமை கூட வாயைத் திறப்பான்
உன்இனிய பெயரைக் தான் சொல்ல..
உன்னை படைத்த பிரமன் கூட
ஒடி வருவான் உன் பின்னாலே...
இத்தனை வர்ணிப்பும் உனக்கு
கிடைத்திருப்பது என்னாலே...
அத்தனைக்கும் ஓர் காரணம்
நான் உன்னைக் காதலிப்பதனால் தானே........

Wednesday, November 10, 2010

Share

மானசீக காதல்....

 உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால் மறக்கமுடிவில்லை...
உன்னை வெறுக்கத்தான்
கோவமாய் நடிக்கிறேன் 
வெறுக்க முடியவில்லை....
உன் பேச்சு வன்மையால்
என்னைக் கவர்ந்தாய்...
உன் ஆசை வார்த்தையில்
என்னைக் கொன்றாய்....
நீ என்னை வர்ணிக்கும் போது - நாணம்
என்னைக் கட்டிப் போடுகின்றது....
என் பார்வையில் நீ தோன்றுகிறாய்
என் சுவாத்தில் நீ கலக்கிறாய்
என் எண்ணங்கள் உன் நினைவால்
தடம் புரள்கின்றது....
நீ என்னைக் காதலிக்கிறாய் என்று
என்னால் உணர முடிகிறது..
நினைப்பது சுலபம் மறப்பது கடினம்
என்று எனக்கும் புரிகின்றது...
நினைப்பது நடக்காது என்று தெரிந்தும்
நாம் காதலிப்பது எப்படி?
எம் காதல் கரையினைத் தாண்டும் முன்
அதற்கு ஒரு அணையப் போடுவோம்..
உன்னையும் உன் காதலையும்
என்றும் இரகசியமாகக் காதலிக்கிறேன்
என்றும் என் நினைவில் நீ வாழ்வாய்...

Saturday, October 30, 2010

Share

எல்லாம் நீயாய்!

 மறந்துவிட நினைக்கின்றேன்
என் நினைவெல்லாம் நீயாய்..
வெறுத்துவிட நினைக்கிறேன்
என் விருப்பமெல்லாம் நீயாய்...
விலகிவிட நினைக்கிறேன்
என் நிழலெல்லாம் நீயாய்!
ஆனால்
முடியவில்லை என்னால்.


Wednesday, February 10, 2010

Share

மௌனம்...

 உன் முகம் காணுகையில் 
உதட்டோரம் மெளனம்........
ஊமையாய் வார்த்தைகள்
ஊன்றியது மனதுள்.....

உன் மேலான  என் காதல்
உறங்கியது என்னுள் 
ஒருதலைக் காதலாய்......

Friday, January 29, 2010

Share

உன் நினைவலைகள்..

 இரவின் பிரிவில்
எனை தொடரும்
நிழல் பிரிகிறது
ஊர் உறங்குபொழுதிலும்
எனை விட்டு பிரியாமல்
தலையணை கண்ணீர்
தருகிறது
உன் நினைவலைகள்...l