உள்ளங்கள் இரண்டிங்கு - தம்
உணர்வினை பகிர்ந்து
உண்மை அன்பினால்
உருவான கரு காதல்..
இதயங்கள் இட மாற
நினைவெல்லாம் நீயாக
என் சுவாசம் தொலைந்து
உனையே நேசிக்கிறேன்
என் கண்ணில் இருப்பது
கருவிழியா அல்ல நீயா
இதயம் துடிக்குதா அல்லது அங்கே
உன் பெயர் ஒலிக்குதா?
இதயத்தில் உதயமாகி
உதிரத்தில் ஊற்றெடுத்து
உடலெங்கும் பரந்தோடும்
உன் காதலால் - இவ்
உலகத்தில் வாழுது என் உயிர்.