Saturday, January 29, 2011

Share

குருதி தோய்ந்த எம் இனம்

 பார்க்க முடியவில்லை
பாவம் இந்த பாரினிலே - எம்
தமிழினம் படும்பாட்டை
தம்மினம் தரணியிலே
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே
தம்முயிர் நீர்த்தனர்
அவர் தம் உயிர் தியாகத்தோடு
உறங்கி போயினவா?
தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.

சொல்ல வார்த்தையில்லை
சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக
செழிக்க வைக்க முயன்ற - எம்
இனம் முண்டங்களாகவும்
முட்கம்பிகளுக்கிடையிலும்
முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட திக்குமுக்காடும்
சோக கதை இதனை...

அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன?

பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..

கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...


Wednesday, January 26, 2011

Share

உறவுகள்.....

வாழ்க்கையின் பயணத்தில்
தடம் பதிந்து நடக்கையிலே
உதயமாகின்றன
ஓராயிரம் உறவுகள்.....!
தன் உதிரத்தை உணவாக்கி!
தன் தசைகளை சுவராக்கி!
உயிருக்குள்ளே உயிர் கொடுத்து
ஈரைந்து மாதங்கள் - இன்னல்கள்
பல தாண்டி - பிள்ளைக்கு
உலகத்தை காட்டும் - உன்னத
முதல் உறவாக அம்மா...
தன் வியர்வையை உழைப்பாக்கி
அன்பென்னும் உணர்வை ஊட்டி
அறிவெனும் ஆலயம் அமைந்து
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றி அமைக்கும்
மாசற்ற உறவாக அப்பா.....!
பிஞ்சு வயதில்
கெஞ்சல் மொழிகள் பேசி
கொஞ்சி விளையாடிட
சண்டைகள் பல பிடித்து
சமாதானம் பல பேசி
அன்பென்னும் சொல்லுக்கு
அட்சய பாத்திரமாக - என்றும்
உடன் பிறந்திட்ட உறவு....
கல்லூரி காலத்தில்
கள்ளமற்று கதை பேசி
துன்பத்தில் துணை  நின்று
இன்பத்தில் பங்கு கொண்டு
இணையற்ற உறவாக
நம்பிக்கை நட்சத்திரமாக
நட்புபெனும் உறவு.....
வாழ்க்கையின் தத்துவத்தை
ஆழமாக படித்து - பல
முகம்களை தினம் சந்திந்து - அதில்
காதல் என்னும் துணை கொண்டு
இரு முகங்கள் இணைந்ததினால்
கணவன் மனைவி உறவு.....
காதலும் காமமும்
இணைந்ததினால்
வாழ்க்கையின் சக்கரத்தில்
மீண்டும் பூமியில் பிறக்கும்
குழந்தை எனும் உறவு.....


Monday, January 24, 2011

Share

காத்திருப்பு....

கற்பனைக் கனவிலே 
காகிதம் வரைகின்றாள்!
 வெட்கம் தடுத்திட  
தலைகுனிந்து சிரித்து
தரனியை நோக்குகின்றாள்...
பிரிந்திட்ட அவனுக்கு பிற 
தொடர்பு ஏதுமின்றி
காகிதங்கள் வரைந்திடும் - இவள்
அவனின் பதில் கண்டு
இன்பத்தில் துளிர்த்திடுவாள்...

காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
ஆணிவேராய் அவன் துணை
ஆசை நிறைந்த கற்பனைகளுடன்
காத்திருக்றாள்  - அவன்
 வருகைக்காக..

Friday, January 21, 2011

Share

நம் நட்பு....

 நாலு பேர் மத்தியிலே
நலம் கேட்கும் சேதியிலே
நம்மவருக்கு இடையிலேயே
நடக்குது நல் உரையாடல்...

நாட்கள் பல கடக்கையிலே
நற் கருத்துக்கள் பயின்றமையால்
நம்பிக்கையின் அத்திவாரத்திலே - நல்
நட்பு உருவாகுதிங்கே...
நட்பு என்னும் அத்திவாரம்
நாலுமாடி ஆகுகையில்
நாசுக்காய் கதை பேசும்
நம் சமூகம் மத்தியிலே
நாளடைவில் பல கேள்வி
நாளுக்கு நாள் எழுகிறது.
நாம் என்ன செய்ய?

நாட்டில் நடக்குது - பல
நாசகாரியங்கள் - இது
நம்மவர் தவறுமல்ல
நட்பின் பிழையுமில்லை
நாளைய தலைமுறை
நல்வழி நடத்திட
நம் முன்னோர் நகர்த்திடும்
நல்லிசை வீனையின் நரம்பிது - அதை
நல்லிசை சேர்ந்து
நாளும் மீட்டி
நம்பிக்கை ஊட்டி - நம்
நட்பினை வளர்ப்போம்...

Monday, January 17, 2011

Share

காதலினால்...

 வருடம் ஒன்று கடந்து
வயது ஒன்று கூடியதால் - நானும்
பருவ வயததைடந்து
பார்ப்பதெல்லாம் ரசிக்கின்றேன்...

பாவையவள் பின் செல்ல
பார்க்கும் கண்களெல்லாம்
பரிகசித்ததினால் என்னை
பருவ வயதினிலே
பலரும் செய்யும் தவறிதென
புரிந்து கொண்டு - நானும்
புறப்பட்டேன் உழைப்பதற்கு....

பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு - ஆனால்
உற்ற துணை தான் இருந்து
உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...


Saturday, January 15, 2011

Share

என் உணர்வுகளை....

 சுவாசம் தந்து
இதயம் பறித்து சென்ற
இனியவனே!
அறியாயோ ஒரு சேதி
உன் நினைவுகள்
என்னும் ஆகுதிக்குள்
வீழ்த்து துடிக்கும்
தருணங்களில்
என் கண்ணீரின்
ஆழம் அறிந்த
என் "பேனா"
என் உணர்வுகளை
தன் உதிரமாக்கி
கவிதை என்னும்
காவியம் படைக்கின்றது ...

Thursday, January 13, 2011

Share

பாசத் தவிப்பு...

 ஐயிரண்டு திங்களாய் - உன்
அகத்தினிலே  தாங்கி
அகிலம் காண வழி சமைத்த 
அன்னையே......
அன்பு காட்டி
அரவணைக்கும் வேளையிலே - தனை
தனியாய் விட்டதினால்
தினம் அழைக்கின்றான் உன்னையே....

ஆறுதல் பல கூறி
அர்த்தங்கள் பல சொல்லி
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க - அவன்
அருகில் இருந்தாலும்
அந்தனைக்கும் மத்தியிலே
தினம் அழைக்கின்றான் உன்னையே...

பாலோடு பகிர்ந்தது - நீ
பாசத்தை மட்டுமல்ல - நற்
பண்புகளை (யும்) ஊட்டியதால் - அவன்
பாரினிலே பெற்ற புகழ் அத்தனையும் - உன்
பாதம் சேர்ப்பதற்காய்
தினம் அழைக்கின்றான் உன்னையே...

பால பருவத்திலே
பாதி வழியினிலே
பரி தவிக்க விட்டு - நீ
பரலோகம் சென்று
பல வருடம் ஆனாலும் - தான்
பயணிக்கும் வழிகளிலே
பக்க துணை நீயிருப்பாய் என நம்பி
பாசத்துடனே தினம் அழைக்கின்றான் உன்னை.....

 

Monday, January 10, 2011

Share

கன்னியிவள் வாழ்வில்...

 கன்னியவள் வாழ்க்கையிலே
கானல் நீராய் போனதுவோ
கற்பனைகள் பல கொண்டு
கட்டிச் சென்ற காதல் கோட்டை.
பள்ளி பருவமது துள்ளியே
சென்றுவிடும் என்பதினால்
தள்ளியே வைத்திருந்தால்
தன் காதல் சிந்தனையை.

கல்லூரி காலமதில்
காளையர்கள் கற்கும் வித்தைகளில்
காதலும் ஒன்று என்றதினால் - அது
கற்பதற்கு மட்டுமா? அல்ல
கடந்து செல்ல உதுவுமா?
கலகத்திலே அதை
கடந்தே வந்துவிட்டாள்
கடந்துவந்த பாதைகளில்
கண்ட பல காட்சிகளில்
நின்று அவள் ரசித்ததினால் - தன்
நிகழ்கால வாழ்வினிலே
நிபதந்தைகள் பல கொண்ட
நிச்சயத்தினை தான் எடுத்தால்
கை நிறைய பணம் வேண்டாம்
கள்ளத்தனம் வேண்டாம்
சிந்தனையைச் செயலாக்கி
செலவுகளை சிறிதாக்கி
தன்னிலை தான் அறிந்து
தர்மவழி செல்பவனே
தன் வாழ்க்கைத் துணைவன் என
அவள் தரணியெல்லாம் தேடுகின்றாள்

வெள்ளத்தில் தத்தளித்து
வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்
தெள்ளத் தெளித்த தண்ணீர்
ஆனால் அங்கே
தேங்கியே நின்றின்றது
தப்புத் தண்ணீர்