Saturday, October 9, 2010

Share

நினைவு.....

 நினைவுகளின் உருவமே...
கால்கள் நனைத்துச் செல்லும்
கடல் அலைகள் போல்...
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் உன் நினைவுகள்...
கண்களை நனைத்துச்
கண்ணீரை வரவழத்து
செல்கின்றது என்னில்..

Friday, October 8, 2010

Share

கோபம்...........

 அன்றைய அவள்
முகத்தில் ஒரு ஆனந்தம்
சூரியன் கூட தன்
இதழ் சுருகி சாந்தம் கொண்டது
அவள் புன்னகையில்

ஆனால் இன்று
நிலவு கூட
அனலை கக்கின்றது
அவளின் கொடிய பார்வையில்

ஏன் இந்த மாற்றம்
அவள் பார்வையில்?
Share

உன் நினைவுகளுடன்...

 மழையில் நனையும்
பட்டாம்பூச்சியாய்...
கண்ணீரில் நனைகிறேன்
உன் நினைவுகளால்..

இறந்திட எண்ணும்
என் இதயம்
உன் நினைவுகளுடன் 
வாழ்ந்திடவும் சொல்லுதடா..

Thursday, October 7, 2010

Share

ஏக்கத்தோடு......

நீ
பேசுவதெல்லாம்
நிஐயம் என்று
நினைக்கும்
என்னிடத்திலா
நிஐமாகவே
நீ பேசாமல்
இருக்கிறாரய்!

உன் மெளனம்
அழகானதுதானது
ரசித்திருக்கிறேன்
உயிரை உற்றி
இன்பத்தை கலந்து
பிசைந்து செய்த
உருவமாக...

இருந்தும்
புரியவில்லை - உன்
மெளனத்தின் அர்த்தம்
எனக்கு இன்று

உன் இதழ்
சொரியும் ஓர்
வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்
ஏக்கத்தோடு......

Wednesday, October 6, 2010

Share

என் காதல்.......

 எப்போதும் மெளனத்தை
அலங்கரிக்கும்
உன் வார்த்தைகள்
ஓர் நாள்
காதலின்
பின் கதவை
திறந்து வைக்கக்கூடும்
அதுவரை
உன்கான காத்திருப்பில்
நீ வரும் பாதையில்...

பூங்கொத்தாய்
சிதறிக்கிடக்கும்
என் காதல்.......

Tuesday, October 5, 2010

Share

கண்ணீர்........

சோதனைகளையும்
வேதனைகளையும்
தாங்க முடியாத
என் இதயம்
விழி வழியே
நீரை சிந்தகின்றது.

அழுவதுக்கு மட்டுமே
சுதந்திரம்
தடுத்துவிடாதீர்கள்
அதனையும்.....

Monday, October 4, 2010

Share

மெளனம்

 வார்த்தை
இல்லாததால்
மெளனிக்கின்றேன்
அதனால்
தினம் தினம்
நானும்
மரணிக்கின்றேன்
என் காதல் சொல்லாமல்..
Share

பெளர்ணமி நிலா

  இரவு நேர பெளர்ணமி நிலா
வானத்துக்கு பொட்டு வைத்து
அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது.

என் நிலா நீ என்பதால்
ரசிக்கின்றேன் ஆனந்தமாக
இதயத்தை ஆக்கிரமிக்கின்றது
உன் நினைவுகள்
என்றும் இன்ப புதையலாக
உன்நினைவுகள் என்னில்....