Thursday, March 21, 2013

Share

அகிலமதில் வார்த்தையில்லை..


“அன்னையின் 
அணைப்பினில்-பல 
ஆயிரம் ஜென்மங்கள்
வாழந்திடலாம்”

“எவ்வித மெத்தையில்
தூங்கினாலும்
அன்பான அணைப்புடன்
அன்னை மடியில் 
தூங்குவதற்கு ஈடாகுமா?”

“அள்ளி அணைத்து
உச்சி முதல் பாதம் வரை
முத்தத்தாலே நித்தம்
பாசமழை பொழியும்
அன்னையவள் அன்பை சொல்ல
அகிலமதில் வார்த்தையில்லை..”

-தோழி பிராஷா-
12.02.2013
Share

முதல் முத்தம்...!


என் 
உணர்வுகளின்
ஆழம் அறிய
செய்தது
அன்று நீ
தந்த 
முதல் முத்தம்...!

-தோழி பிராஷா-
12.02.2013
Share

இன்றைய உன் பிரிவு....!


இழப்புகள்
புதிதல்ல எனக்கு
இருந்தும்
தாங்கிக் கொள்ள
பழகிக் கொண்டேன்.
ஆனால்,
சுழலும் தீப்பிளப்பாய்
சுட்டெரிக்கிறது
இன்றைய 
உன் பிரிவு....!

-தோழி பிராஷா-
10.02.1013

Share

தினம் தேடுகின்றேன்


நாம் நடந்து சென்ற
பாதை வழி
நான் கடந்து போகையிலே
உன்னை தினம் 
தேடுகின்றேன்
எங்கும் நீ இல்லை..!
ஆனால்
காலங்கள் கடந்தாலும்
நான் நீ 
என்னும் நினைவுகளை
தினம் கடந்தே
செல்கின்றேன்..!

-தோழி பிராஷா-
09.02.1013
Share

உன்னை தேடுகிறேன்.


அதிகமாய் 
வலிக்கிறது
மடி சாய
உன்னை தேடுகிறேன்.
ஏனோ
கண்ணாமூச்சி
காட்டுகிறாய்
இப்போதெல்லாம்...!!!

-தோழி பிரஷா(tholi Pirasha)-
05.02.2013

Share

அம்மா


அம்மா
நான் தேடி
அலையும்
சொர்க்கம்

-தோழி பிரஷா (Tholi Pirasha)-
04.02.2013
Share

தேடுகிறேன் எங்கும்

தேடுகிறேன்
எங்கும்
காட்சி தர 
மறுக்கிறாய்
தென்றலைப் போல...!


-தோழி பிராஷா-(Tholi Pirasha)-
ரோஜாக்கள் FAcebook Page
Share

நினைவு பூக்கள்



தினம் தினம்
மலரும்
உன் நினைவு
பூக்கள்
என் கண்ணீர்
மழையில்
நனைந்து
உயிர் வாழ்ந்து
கொண்டிருக்கிறது

-தோழி பிரஷா-
29.01.2013