Sunday, March 20, 2011
Thursday, March 17, 2011
Share
புது வாழ்வு...
காதல் என்னும் பாடத்தை
கருத்துடனே கற்ற அவள்
தேர்வெழுதும் நேரத்தில்
தோற்றி தவறியதால்
வேறுதுறை தேர்ந்தெடுத்து
வெற்றி பெற்ற நேரமதில்
எண்ணியே பார்க்கிறாள்
மின்னி மறைந்த எண்ணங்களை...
கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...
கருத்துடனே கற்ற அவள்
தேர்வெழுதும் நேரத்தில்
தோற்றி தவறியதால்
வேறுதுறை தேர்ந்தெடுத்து
வெற்றி பெற்ற நேரமதில்
எண்ணியே பார்க்கிறாள்
மின்னி மறைந்த எண்ணங்களை...
கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...
Labels:
காதல் கவிதைகள்
Monday, March 14, 2011
Share
புரியாமல் புலம்புகிறேன்
வழிமாறி போன கண்ணில்
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்
தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து
புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்
தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்
கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்
தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து
புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்
தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்
கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....
Labels:
காதல் வலி கவிதைகள்
Friday, March 11, 2011
Share
அப்பா...
நாம் தழைக்கவென
தன் தலைமுறையை தனதாக்கி
தன் மார்பில் எனை தாங்கி
வளர்திட்ட அன்பு உருவே
என் தந்தை
எடுத்தடி எடுத்து வைக்கையிலும்
ஏடுடெடுத்து படிக்கையிலும்
என்னருகே தானிருந்து
தன் வலியாய் தாங்கிட்டார்
என் வலிகள் அத்தனையும்
முதல் எழுத்துடனே உறவின்
முகவரி அளித்து - அன்பின்
முழு உருவாய் அன்னையுமாய்
ஆசானுமாய் அரவணைத்தே
அகிலமதில் அடி எடுத்து வைக்க
அரண்மனை அமைந்த அன்புருவே
அடி எடுத்து வைத்த நாள் முதல்
படிகள் பல தாண்டி நான்
பயணிப்பதை பார்ப்பதற்கு - முன்னே
பறி கொடுத்தால் உம்மை
பரி தவிக்கின்றேன் இங்கு
ஈருவாய் இவ்வூலகில்
இன்னல்கள் பல தாண்டி
இணையற்ற அன்பளித்தே
இரவு பகல் எனை சுமந்த
உம் உதிரத்தில் உதிந்தபுத்திர(ரி)ன்-நான்
இவ்வூலகத்தில் என்றும்
உத்தம(மியா)னாய் புகழ்பரப்பி
வாழ்ந்திடுவேன்....
தன் தலைமுறையை தனதாக்கி
தன் மார்பில் எனை தாங்கி
வளர்திட்ட அன்பு உருவே
என் தந்தை
எடுத்தடி எடுத்து வைக்கையிலும்
ஏடுடெடுத்து படிக்கையிலும்
என்னருகே தானிருந்து
தன் வலியாய் தாங்கிட்டார்
என் வலிகள் அத்தனையும்
முதல் எழுத்துடனே உறவின்
முகவரி அளித்து - அன்பின்
முழு உருவாய் அன்னையுமாய்
ஆசானுமாய் அரவணைத்தே
அகிலமதில் அடி எடுத்து வைக்க
அரண்மனை அமைந்த அன்புருவே
அடி எடுத்து வைத்த நாள் முதல்
படிகள் பல தாண்டி நான்
பயணிப்பதை பார்ப்பதற்கு - முன்னே
பறி கொடுத்தால் உம்மை
பரி தவிக்கின்றேன் இங்கு
ஈருவாய் இவ்வூலகில்
இன்னல்கள் பல தாண்டி
இணையற்ற அன்பளித்தே
இரவு பகல் எனை சுமந்த
உம் உதிரத்தில் உதிந்தபுத்திர(ரி)ன்-நான்
இவ்வூலகத்தில் என்றும்
உத்தம(மியா)னாய் புகழ்பரப்பி
வாழ்ந்திடுவேன்....
Monday, March 7, 2011
Share
பெண்மணிக்காக..
கருவறையில் ஆரம்பித்த
அவள் பயணம்
காற்றின் வேகத்தினையும்
விஞ்சியே செல்கின்றது - இந்த
விஞ்ஞான உலகத்திலே
புதிய பொழுதோடு
மலர்ந்திட்ட மங்கையர்கள்
புரிகின்ற செயல்கள் பல
புரியாத புதிராகவே தொடர்கின்றன
அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை
பொறுமையின் முடிவுனை
சொல்ல எல்லையில்லை
முடிவிலியாகவே தொடர்கிறது
அவள் பயணம்
அடுக்களையில் கை வண்ணம்
அறிவினிலே அவள் திறன்
அலுவலகத்தில் சொல் திடத்தோடு
சேர்கின்றது செயல் திறனும்
பட்டங்கள் பல எடுத்தே
சட்டங்கள் தனை கொண்டு
பொண்னை பொருள் கொண்டு
சாடிடும் சமூகத்தை
வாதித்து வென்று தினம்
சாதிக்கின்றாள் இன்று
தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார்..
அவள் பயணம்
காற்றின் வேகத்தினையும்
விஞ்சியே செல்கின்றது - இந்த
விஞ்ஞான உலகத்திலே
புதிய பொழுதோடு
மலர்ந்திட்ட மங்கையர்கள்
புரிகின்ற செயல்கள் பல
புரியாத புதிராகவே தொடர்கின்றன
அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை
பொறுமையின் முடிவுனை
சொல்ல எல்லையில்லை
முடிவிலியாகவே தொடர்கிறது
அவள் பயணம்
அடுக்களையில் கை வண்ணம்
அறிவினிலே அவள் திறன்
அலுவலகத்தில் சொல் திடத்தோடு
சேர்கின்றது செயல் திறனும்
பட்டங்கள் பல எடுத்தே
சட்டங்கள் தனை கொண்டு
பொண்னை பொருள் கொண்டு
சாடிடும் சமூகத்தை
வாதித்து வென்று தினம்
சாதிக்கின்றாள் இன்று
தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார்..
Share
உன் மனசு போல....
நான் சந்திக்கும் ஒவ்வொரு
கடினமான கணபொழுதுகளையும்
எவ்வாறு சமாளிப்பேன்
உன் துணையின்றி...
தடுமாறும் தருணங்களில்
தலை தடவி
ஆறுதல் தரும்
தாயாய் இருந்த நீ
தவிக்க விட்டு செல்வதன்
காரணம் தான் புரியாமல்
புலம்புகின்றேன் பித்தனாய்
உணர்வினை பகிர்ந்து - உண்மை
அன்பினை பொழிந்த - நீ
உதறிட்ட பின்பும் - என்
உடலின் ஓர் அணுவும்
உன் நினைவின்றி அசையாதாம்
என் உடலாயிது - அதில்
உயிர் தான் இருக்கிறதா
உணரக் கூட முடியவில்லை
ஏனெனில்!
உயிரை ஒப்படைந்து விட்டதால்
எப்பவோ உன்னிடத்தில்..
மரணத்தின் போதும் கூட
உன் மடியே தஞ்சமேன
என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல...
Friday, March 4, 2011
Share
உறவுகள் என்னை சுற்றி
உறவு கொண்டாடினாலும்
அன்பு என்னும் போலி வேலி போட்டு
வேசம் தனை பாசமாய் காட்டுதிங்கே..
என் சொந்த வாழ்க்கையில்
சேர்ந்திட்ட சோகமிதை
சொந்த பந்தம் சூழ்ந்திருந்து
சீர் செய்யத் தான் முடிந்திடுமா?
பணம் பொருள் பார்த்தாச்சு
சொத்து சுகம் சேர்ந்தாச்சு
இத்தனையும் இருந்தென்ன
உற்றதுணை தானிருந்து-என்
உள்ளத்து உணர்வுகளை
உளமாறபரி மாறும்
உண்மை அன்பை யார் தருவார்?
..............................................................................................................................
யார் தருவார்?
நீண்ட தூரம் சென்றதனால்
நித்தமும் நடங்குதிங்கே
முடிவற்ற பாச போராட்டம்
நிலையற்ற இவ் உலகில்
நிம்மதியின்றி துடிக்கின்றேன்-உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்...!
நித்தமும் நடங்குதிங்கே
முடிவற்ற பாச போராட்டம்
நிலையற்ற இவ் உலகில்
நிம்மதியின்றி துடிக்கின்றேன்-உண்மை
அன்பு என்ற ஒன்றுக்காய்...!
உறவுகள் என்னை சுற்றி
உறவு கொண்டாடினாலும்
அன்பு என்னும் போலி வேலி போட்டு
வேசம் தனை பாசமாய் காட்டுதிங்கே..
என் சொந்த வாழ்க்கையில்
சேர்ந்திட்ட சோகமிதை
சொந்த பந்தம் சூழ்ந்திருந்து
சீர் செய்யத் தான் முடிந்திடுமா?
பணம் பொருள் பார்த்தாச்சு
சொத்து சுகம் சேர்ந்தாச்சு
இத்தனையும் இருந்தென்ன
உற்றதுணை தானிருந்து-என்
உள்ளத்து உணர்வுகளை
உளமாறபரி மாறும்
உண்மை அன்பை யார் தருவார்?
...............................................................................................................................
Wednesday, March 2, 2011
Share
நங்கை உன் கையிலே..!
பெண் குலத்தின் தலைவியே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ
தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே
கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு
முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்
புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்
மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்
நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ
தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே
கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு
முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்
புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்
மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்
நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே
Subscribe to:
Posts (Atom)









