Monday, February 7, 2011

Share

அன்று .! இன்று.!

அன்று .!
கண்ணாடி யன்னலூடே 
பார்வையினை சிதறவிட்டு
முன்னாடி நடந்தவற்றை
தன்  நாடியில் கைவைத்து
தன் தலையெழுத்தை எண்ணி
தனித்திருந்து யோசித்தாள்.!
இன்று.!
முன்னாடியெல்லாம் யன்னலுனூடே
அவள்  கண் நாடி நிற்பது 
தன்னவன்   வருகையினை..
இந்நாளில் அவள் கண்கள் நாடி நிற்பது
கண்ணாளன் வருவானா? இல்லையேல்
காத்திருப்பு தொடருமா?
மனப்பாரம் கூடியே 
மனச்சோர்வில் அவள்.!
அன்று .!
கடற்கரை மணலிலே
இரு கைகோர்த்து நடந்து.!
இம்சைகள் பல புரிந்து
இரு இதயம் பேசிடும் எதிர்கால 
வாழ்வை எண்ணி..
இன்று.!
இருவர் கைகோர்த்து 
இசைந்து நடந்த கடற்கரையில்
இன்னிசையாய் கடற்காற்று 
கீதமாய் அவன் நினைவு
கீறுகின்றது அவள் மனதை...!
அன்று .!
அவளுடன் அவன் இருக்கையில் 
அன்பெனும் மழையிலே
நித்தம் நனைந்தாள் மகிழ்விலே.!
இன்று.!
 தென்றல் வருடையில்
உள்ளத்து நினைவுகளில்
தென்னவன் வருடலாய்
சிலிர்த்திடும் அவளுள்ளம்...!
 அன்று .!
 இரவினிலே தனிமை தேடி
தொலைபேசி வழி அவனை தேடி
செவிவழி அவன் குரல்கேட்டு
செவ்விதழில் புன்னகையும்
சேர்ந்திருக்கும் என்நாளும்.!
 இன்று.!
கட்டுமரமாய் கவலைகள் சுமந்து
பகலெனும் நதிகடந்து
இரவெனும் கரைசேர்ந்து
தனித்திருந்து அழுதிடுவாள்...
யாரறிவார் அவள் துன்பம்.!

அன்றய நினைவுகளை மீட்டிய படி அவள் தன் வேலைகளை செய்து முடித்தாள்.
                     ஜெனனி குடும்பத்தில் முத்த பொண்ணு 2 தம்பி 1 தங்கை. பெற்றோர் சொல்லே வேதவாக்காய் ஏற்று நடப்பவள். படிப்பே உலகமென இருந்தாள். கிராமத்தில் பள்ளியில் படித்து  சிறந்த பெறுபேறுகள் பெற்றாள்.  மேற்படிப்பிற்காக நகரம் செல்லவேண்டும். மேற்படிப்பை தொடர முடியுமா என அவள் மனதுள் கேள்விகள் பல குடும்ப வறுமையே அதற்கு காரணம். தந்தை மகளின் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டினார். அவளின் மேற்படிப்பிற்காக தந்தை தன் கெளரவத்தை தள்ளி வைத்து உடன் பிறப்பிகளிடம் உதவிகேட்டார்  அவர்கள் மறுத்தனர். தந்தை மனம் சோரவில்லை தொடர்ந்து தனது நண்பன் ஒருவனிடம் உதவி கேட்டார் கிடைத்ததும் குடும்பமே சந்தோஷத்தில்.  
                                                                                இருப்பினும் பணத்தைவிட பெரும் பிரச்சனையாக அவள் நகரத்தில் தங்குமிடப் பிரச்சனை நகரத்தில் உறவுகள் யாருமில்லை. பல்கலைகழக விடுதியில் தங்க முடிவுசெய்து மேற்படிப்பை தொடங்க ஆரம்பித்தாள்....

(தொடரும்......)

Thursday, February 3, 2011

Share

வாழ்வில் உதயம் தந்தவளே....

 உயிரானவளே அறியாயோ என்
இதயம் பாடும்  முகாரி ராகத்தை......

உறவுகள் பல இருந்தும்
சொந்தம்கொண்டாட...
சொத்து சுகம் இருந்தும்
சோகம் தீர்ந்து
இன்பம் அளிக்கும்
உன்னத உறவாய்
உயிர் தோழியாய் இருந்த அவள்....

என் உணர்வுக்கு உயிர் கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
ஊக்கத்திற்கு உரம் கொடுத்து
உயர்வுக்கு வழி சமைத்த
உன் உணர்வலைகள் ஒவ்வொன்றும்
என் உதிரத்தில் கலந்து -அவள்
என் உள்ளத்தில் அமர்ந்திட்ட
உண்மை நிலைதனை
உடனே உரைத்த விட்டால்
நிலைமை என்னாகுமோ?

என் வாழ்வில்
உதயம் தந்தவளே
உள்ளமது உதிர்ந்திடுமா? அல்ல
இதயம் தந்து என்னுடன்
இணைந்து வாழ்வாளா?

படத்துடன் கவிதைகளை  காண click here 

Tuesday, February 1, 2011

Share

நம் காதல் கதை...

 சொல்லிடவா நீ எனை
சேர்ந்த நம் காதல் கதைதனை...

கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்

இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்

சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணி இணைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்

உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....

படத்துடன் கவிதைகளை  காண click here

Saturday, January 29, 2011

Share

குருதி தோய்ந்த எம் இனம்

 பார்க்க முடியவில்லை
பாவம் இந்த பாரினிலே - எம்
தமிழினம் படும்பாட்டை
தம்மினம் தரணியிலே
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே
தம்முயிர் நீர்த்தனர்
அவர் தம் உயிர் தியாகத்தோடு
உறங்கி போயினவா?
தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.

சொல்ல வார்த்தையில்லை
சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக
செழிக்க வைக்க முயன்ற - எம்
இனம் முண்டங்களாகவும்
முட்கம்பிகளுக்கிடையிலும்
முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட திக்குமுக்காடும்
சோக கதை இதனை...

அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன?

பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..

கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...


Wednesday, January 26, 2011

Share

உறவுகள்.....

வாழ்க்கையின் பயணத்தில்
தடம் பதிந்து நடக்கையிலே
உதயமாகின்றன
ஓராயிரம் உறவுகள்.....!
தன் உதிரத்தை உணவாக்கி!
தன் தசைகளை சுவராக்கி!
உயிருக்குள்ளே உயிர் கொடுத்து
ஈரைந்து மாதங்கள் - இன்னல்கள்
பல தாண்டி - பிள்ளைக்கு
உலகத்தை காட்டும் - உன்னத
முதல் உறவாக அம்மா...
தன் வியர்வையை உழைப்பாக்கி
அன்பென்னும் உணர்வை ஊட்டி
அறிவெனும் ஆலயம் அமைந்து
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றி அமைக்கும்
மாசற்ற உறவாக அப்பா.....!
பிஞ்சு வயதில்
கெஞ்சல் மொழிகள் பேசி
கொஞ்சி விளையாடிட
சண்டைகள் பல பிடித்து
சமாதானம் பல பேசி
அன்பென்னும் சொல்லுக்கு
அட்சய பாத்திரமாக - என்றும்
உடன் பிறந்திட்ட உறவு....
கல்லூரி காலத்தில்
கள்ளமற்று கதை பேசி
துன்பத்தில் துணை  நின்று
இன்பத்தில் பங்கு கொண்டு
இணையற்ற உறவாக
நம்பிக்கை நட்சத்திரமாக
நட்புபெனும் உறவு.....
வாழ்க்கையின் தத்துவத்தை
ஆழமாக படித்து - பல
முகம்களை தினம் சந்திந்து - அதில்
காதல் என்னும் துணை கொண்டு
இரு முகங்கள் இணைந்ததினால்
கணவன் மனைவி உறவு.....
காதலும் காமமும்
இணைந்ததினால்
வாழ்க்கையின் சக்கரத்தில்
மீண்டும் பூமியில் பிறக்கும்
குழந்தை எனும் உறவு.....


Monday, January 24, 2011

Share

காத்திருப்பு....

கற்பனைக் கனவிலே 
காகிதம் வரைகின்றாள்!
 வெட்கம் தடுத்திட  
தலைகுனிந்து சிரித்து
தரனியை நோக்குகின்றாள்...
பிரிந்திட்ட அவனுக்கு பிற 
தொடர்பு ஏதுமின்றி
காகிதங்கள் வரைந்திடும் - இவள்
அவனின் பதில் கண்டு
இன்பத்தில் துளிர்த்திடுவாள்...

காகிதத்தில் பிறந்திட்ட
இவள் காதல்
ஆலமரமாய் வளர்ந்திட
ஆணிவேராய் அவன் துணை
ஆசை நிறைந்த கற்பனைகளுடன்
காத்திருக்றாள்  - அவன்
 வருகைக்காக..

Friday, January 21, 2011

Share

நம் நட்பு....

 நாலு பேர் மத்தியிலே
நலம் கேட்கும் சேதியிலே
நம்மவருக்கு இடையிலேயே
நடக்குது நல் உரையாடல்...

நாட்கள் பல கடக்கையிலே
நற் கருத்துக்கள் பயின்றமையால்
நம்பிக்கையின் அத்திவாரத்திலே - நல்
நட்பு உருவாகுதிங்கே...
நட்பு என்னும் அத்திவாரம்
நாலுமாடி ஆகுகையில்
நாசுக்காய் கதை பேசும்
நம் சமூகம் மத்தியிலே
நாளடைவில் பல கேள்வி
நாளுக்கு நாள் எழுகிறது.
நாம் என்ன செய்ய?

நாட்டில் நடக்குது - பல
நாசகாரியங்கள் - இது
நம்மவர் தவறுமல்ல
நட்பின் பிழையுமில்லை
நாளைய தலைமுறை
நல்வழி நடத்திட
நம் முன்னோர் நகர்த்திடும்
நல்லிசை வீனையின் நரம்பிது - அதை
நல்லிசை சேர்ந்து
நாளும் மீட்டி
நம்பிக்கை ஊட்டி - நம்
நட்பினை வளர்ப்போம்...

Monday, January 17, 2011

Share

காதலினால்...

 வருடம் ஒன்று கடந்து
வயது ஒன்று கூடியதால் - நானும்
பருவ வயததைடந்து
பார்ப்பதெல்லாம் ரசிக்கின்றேன்...

பாவையவள் பின் செல்ல
பார்க்கும் கண்களெல்லாம்
பரிகசித்ததினால் என்னை
பருவ வயதினிலே
பலரும் செய்யும் தவறிதென
புரிந்து கொண்டு - நானும்
புறப்பட்டேன் உழைப்பதற்கு....

பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு - ஆனால்
உற்ற துணை தான் இருந்து
உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...