Friday, July 15, 2011

Share

நான் யார் உனக்கு?


உன்னுடன் பழகியது குற்றமா
உன்னில் காதல் கொண்டது குற்றமா
உரைத்திடு  உண்மையை 
உன்னை  விட்டு செல்லுகின்றேன்...


உறவுகளை வெறுத்தேன் 
உன்னத நட்புக்களை இழந்தேன் 
உடையுடன் நடையை மாற்றினேன்
உனக்காக எல்லாம் உனக்காக....


என்நிலை தெரிந்தும் 
என்னை வார்த்தையாலே 
எள்ளி நகையாடுகின்றாய் 
வலிக்க வலிக்க...!
எட்டாப்பழம் புளிக்குமென்று தெரிந்தும்
என்னை ஏன் காதலித்தாய்?


எதுவரினும் எதிர்த்திடுவேன் 
என்றும் உன்னை நான் மறவேன்
என்றென்றும் நீ வேண்டுமென்றாய்
என் உயிரே நீ என்றாய்
எல்லாமே வார்த்தைஜாலமா?


நான் உனக்காக எதையிழக்க 
உனையிழக்க நான் தயாரில்லை 
எனையிழக்க நீ தாயரெனில்
உன் முடிக்கு தடைபோட 
நான் யார் உனக்கு?...

13 comments:

Unknown said...

//நான் உனக்காக எதையிழக்க
உனையிழக்க நான் தயாரில்லை
எனையிழக்க நீ தாயரெனில்
உன் முடிவை தடைபோட நான் யார் உனக்கு?//
Very nice! :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

@ஜீ... நன்றி ஜீ

Unknown said...

good one but same blood...

நிரூபன் said...

வார்த்தை ஜாலங்களால் மைசி பூசி அழிக்கப்பட்ட காதல் ஒன்றின் உணர்வுகளை உங்கள் கவிதை இங்கே சொல்லி நிற்கிறது.

கவி அழகன் said...

சகோ அழகான கவிதை...

'பரிவை' சே.குமார் said...

kavithai arumai...
vazhththukkal.

S Maharajan said...

அழகான கவிதை...

ஹேமா said...

அன்பைத் திணிக்கமுடியாது தோழி.முடிவெடுக்கட்டும் விடுங்கள் !

இராஜராஜேஸ்வரி said...

நான் உனக்காக எதையிழக்க
உனையிழக்க நான் தயாரில்லை
எனையிழக்க நீ தாயரெனில்
உன் முடிக்கு தடைபோட
நான் யார் உனக்கு?...
அழகான கவிதை. வாழ்த்துக்கள்..

Learn said...

நான் உனக்காக எதையிழக்க
உனையிழக்க நான் தயாரில்லை
எனையிழக்க நீ தாயரெனில்
உன் முடிக்கு தடைபோட
நான் யார் உனக்கு?...


அருமையான உணர்வுகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான வரிகள் பாராட்டுகள் தோழி

சித்தாரா மகேஷ். said...

//உறவுகளை வெறுத்தேன்
உன்னத நட்புக்களை இழந்தேன்
உடையுடன் நடையை மாற்றினேன்
உனக்காக எல்லாம் உனக்காக....//
கவிதை அருமையாக இருக்கிறது அக்கா.

சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I

மாய உலகம் said...

உன் முடிக்கு தடைபோட
நான் யார் உனக்கு?...
எல்லாமே வார்த்தைஜாலம்...

அழகான காதல் கவிதை.....வாழ்த்துக்கள்