Wednesday, March 31, 2010

Share

மாறுமா???

 வளம் கோளித்த எம்மண்ணில்
வளமான வாழ்வு மீண்டும் கிடைத்திடுமா?
போரினால் சீர்துலைந்த நம் தேசம்
பூங்காவனமாய் மாறிடுமா?

அன்னிய தேசத்தில் ஆயிரம் உறவுகள்
அடிமைகளாய் அலைகின்றன...
எம் தேச மண் வாசனை சுவாசித்திட 
ஏங்கும் பல்லாயிரம் உயிர்கள்...

காலம் தான் மாறிடுமா?
Share

உடைந்தது என் இதயம்


 காதலியாய் நீ வருவாயென
பழகிய நாட்கள்
பகிர்ந்துரைக்க
பண்பான உன் அன்னை
பகிர்ந்திட்டாள் என்னிடம் பத்திரிகை 
பிரித்தேன் திருமண பத்திரிகை
பார்த்னே் ஆவலாய் பெயரை
உடைந்தது என் இதயம் கண்ணாடியாய்
உன் பெயரை பார்த்து.



Share

அவளால் மாற்ற பட்ட விதி...

பிறப்பில் இறைவனால் எழுதபடுகின்ற விதி- என்
வாழ்வில் அவளால் மாற்றப்பட்டது
காதல் காதல் காதல்
இதனால் இழந்தவை ஏராளம்
குடும்பத்தார் அன்பை இழந்தேன்
குதூகலமான் நட்பை இழந்தேன்
வாழ வைக்கும் கல்வியை இழந்தேன்
யாவும் இழந்து அவளால் தனிமை படுத்த பட்டேன்

Wednesday, March 24, 2010

Share

நேற்றே நான் இறந்து விட்டேன்

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....

அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க முடிந்தது?

Sunday, March 21, 2010

Share

துளிர் விட்ட காதல்...

அவன் நெஞ்சத்தீயில்
வஞ்சகர்கள் விதைத்த
துரோகச்செடிகளின் இடையே- இந்த
வஞ்சியின் காதல் துளிர்த்தது....!

கொஞ்ச மல்ல
கொடுஞ்சொற்கள்
உற்றவர்கள் வீசியவை...!
அத்தனையும்
பூச்செண்டின் புறவிதழ்களாய்
மாற்றியது அந்த
சுந்தர தேவதையின்
மந்திர வார்த்தைகள்!

Saturday, March 20, 2010

Share

தேடுகிறேன் உன்னை...........

உன்னை ஒரு நாள் காணாத  
என் இரு விழிகள் 
ஏங்குது ஏழு ஜென்மங்கள்
உன்னை காணதவைபோல்

என் தொலைபேசி  அலறிட
செவிகளில் உன் குரல் மீண்டும் மீண்டும்
இடைவிடாது ஒலிக்கின்றது
தேடுகின்றேன் உன்னை
தேய்மானம் மிகுதியாய்.

Friday, March 19, 2010

Share

அன்புக்கு நேரமில்லை !!!!!!

ஆரவாரம் மிகுந்த வாழ்க்கை
அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கை
அமைதியற்ற வாழ்க்கை -அதில் 
 அன்புக்கு கிடைக்கவில்லை நேரம்
சொற்கள் ஆயிரம் அதை
கேட்பவர் இங்கு யாருமில்லை
வேதனைகள் ஆயிரம், ஆயிரம் -அதை
விளங்குபவர்கள் யாருமில்லை
வரம்புமீறிய வருமானம்-அங்கே
வரவரக்குரைகின்றது மனிதநேயம்

Wednesday, March 17, 2010

Share

தாயின் மகிமை

அன்பின் வடிவமாய் - நல்
அறிவினை ஊட்டி
பண்பாக வளர்த்து
பாசமதைத் தந்து
இன் சொற்கள் பேசி

 இல்லத்தை இன்பமாக்கும்
அன்னையவள் வாழ்க - எம்
அன்புத் தெய்வமாய்

Tuesday, March 9, 2010

Share

காதல் வலி தந்தவனே..

காதலித்தாய் என்னை
கண்ணீருடன் கற்பனையும் தந்தாய்
காவலனாய் உன்னை எண்ணி-என்
காலங்கள் நகருதன்பே..

காதல் காயங்கள் நீ தந்தாய் 
காரணங்கள் புரியவில்லை எனக்கு
காலங்கள் நகரும் காரணங்கள் புரிந்திடும் என
காத்திருந்தேன் தனிமையிலே

காலம் காரணத்தை கூறவில்லை
காலன் உன்னை அழைத்தபின்
காரணத்தை தெரிந்து கொண்டேன்
காலமுழுதும் உன் கல்லறையில்-நம் காதல்
காவியம் வரையட்டும்