Monday, August 23, 2010

Share

என் விதியின் பாதையில்

 அன்பே உன்னை சந்தித்தேன்
என்னை சிந்தித்தேன்...
உன் பார்வை சீண்டிட
என் மனம் தடுமாறிட...

கனவுகள் எனக்குள்
கருக்கொண்டது...
கருவுற்ற கனவுளும்
வளர்ந்திட தோன்றிய
கனவு நிஜமாகியது...

காலங்கள் கரைந்தது
விதி தேவன் விளையாட
நம் வாழ்வு திசை மாறிட
வாழ்வெனும் பாதையே
வெறுமையாய் ஆனது

நீ அங்கே தனிமையிலே
நான் இங்கே தனிமையிலே
சந்திப்பே இல்லாத
சந்தர்ப்பம் சூழ்ந்திட

காலங்கள் காற்றுபோல்
வேகமாய் சுழன்றது
உன் வாழ்வு
திசை மாறிடவும் ஆனதடி

உன் உறவுகளின் அதட்டலால்
மனதை நீ கல்லாக்கினாய்
என நானறிவேனடி
உறவுகளுக்காய்
உன்னை நீ மறந்தாய்
புதியவளாய் புது உறவில்
இணைந்திட்டாயடி...

கனவுகள் கரையேறுமென
காத்திருந்தேன்
கனவினை களைந்து
என் ஆசைகளை
கானல் நீராக்கியது விதி

உன் நினைவுகளை
எனக்குள் சிறைவைத்து
என் சுவாசமே நீயென
வாழ்கிறேன் நானடி...!

உன் பிழை ஏதடி
இறைவன் அவன்
திருவிளையாடலடி...

2 comments:

கவி அழகன் said...

ஆஹா என்ன கவிதை
வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.....