Sunday, August 8, 2010

Share

இதயச் சுமை

என் இதயச் சுமையை
இறக்கி வைக்க இடமில்லை ...
சொல்லி அழுது விட்டால்
துயரமெல்லாம் தீர்ந்து விடும்

சொல்லவொரு உறவும் இல்லை ...
சொல்வதற்கும் வார்த்தையில்லை ...
தனியே படுத்தழுது
தலையணை நனைப்பதன்றி
வேறு எதுவும் இல்லை

என் நம்பிக்கையின் சிகரமாய்
என்னை நேசிக்கும்
உறவு ஒன்றை தேடுகிறேன்
வழி ஒன்று காணவில்லை ...

ஆற்றும் வழி தேடுகிறேன்
ஆறவில்லை தேறவில்லை ...
என் மனது !!!

5 comments:

Maduraimohan said...

நன்றாக இருக்கிறது தோழி :)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நன்றிகள் நண்பரே. தொடர்ந்தும் வருங்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம்ம்ம் நல்லாயிருக்குங்க...

Unknown said...

nice poem...

கடல் said...

சகோதரி,
உங்கள் தளம் இணைக்கப் பட்டுவிட்டது. நன்றி.
விருப்பமிருந்தால் இந்த மகளிர் திரட்டியை மற்ற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த நமது நிரலியைப் பயன்படுத்தலாம்.